செய்திகள் மலேசியா
கோத்தபாரு தடுப்புக்காவல் மரணச்சம்பவம்: புக்கிட் அமான் விளக்கம்
கோத்தபாரு:
தடுப்புக்காவலில் இருந்த ஆடவர் உயிரிழந்த சம்பவத்தில் எந்தவித சந்தேகத்துக்குரிய அம்சங்களும் இல்லை என புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
கிளந்தான் மாநிலம் கோத்தபாருவில் உள்ள காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 வயது ஆடவர் மரணமடைந்தார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயலில் ஈடுபட்டதை அடுத்து, அந்த 37 வயது ஆடவர் தடுத்து வைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் லோக் அப்-பிலேயே உயிரிழந்தார்.
பிரேதசப் பரிசோதனையின்போது அவரது உடலில் எந்தவித காயங்களும் காணப்படவில்லை என்றும், வேறு சந்தேகங்கள் எழவில்லை என்றும் புக்கிட் அமானின் ஒருங்கிணைப்பு மற்றும் தர நிலைப் பிரிவின் இயக்குநர் அஸ்ரி அஹமத் (Azri Ahmad) தெரிவித்துள்ளார்.
"உயிரிழந்த ஆடவரின் நுரையீரலில் நீர் தேங்கியிருந்ததுதான் அவரது மரணத்துக்கு காரணம். இந்தச் சம்பவத்தை திடீர் மரணம் என்று வகைப்படுத்தி உள்ளோம்.
"எனினும், தடுப்புக்காவலில் நிகழ்ந்த மரணம் என்பதால், இது குறித்து சம்பந்தப்பட்ட பிரிவு உரிய விசாரணை மேற்கொள்ளும். பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்படும் இந்த விசாரணையின் அறிக்கை, அரசு துணை வழக்கறிஞரிடம் அளிக்கப்படும். அதன் பேரில் எடுக்கப்படும் முடிவுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்றார் அஸ்ரீ அஹமத்.
கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு தடுப்புக்காவல் மரணச்சம்பவங்கள் பதிவாகி உள்ளன. முன்னதாக, தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓர் ஆடவர் உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 8:11 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இல்லை
March 28, 2024, 3:04 pm
குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
March 28, 2024, 2:26 pm
டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா டிரான்சிட் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் அன்பளிப்பு
March 28, 2024, 2:23 pm
செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவுங்கள்: அருள் ஆனந்தன்
March 28, 2024, 2:21 pm
பாதிக்கப்பட்ட Good year தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 22 நிறுவனங்கள் முன் வந்துள்ளன
March 28, 2024, 2:19 pm
இந்தியாவிலிருந்து 500,000 டன் வெள்ளை அரிசியை எதிர்பார்க்கிறோம்: முஹம்மத் சாபு
March 28, 2024, 2:17 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
March 28, 2024, 1:32 pm
ABGR 2024 சந்தை கண்காட்சி; ஜொகூர் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.
March 28, 2024, 1:04 pm
ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்
March 28, 2024, 12:06 pm