செய்திகள் மலேசியா
மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ஊசி போட நான்கு மையங்கள்
கோலாலம்பூர்:
மூத்த குடிமக்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. இதற்கு வசதியாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நான்கு இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு ஊசி செலுத்திக்கொள்வோர் முன்பதிவு செய்யத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்ரா அனைத்துலக வாணிப மையம், புக்கிட் ஜலில் Axiata Arena, ஐடியல் மாநாட்டு மையம் (ஷா ஆலம்), Sokka Gakkai Hall (கிள்ளான்) ஆகிய நான்கு மையங்களில் தினந்தோறும் இடைவிடாமல் பூஸ்டர் ஊசிகள் செலுத்தப்பட உள்ளன.
பொது விடுமுறை நாட்களில் மட்டும் பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை இம்மையங்கள் செயல்படும்.
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங்கு, சரவாக் ஆகிய பகுதிகளில் 60 மற்றும் அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களில் சுமார் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் ஊசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு, மூன்று மாதங்களைக் கடந்துவிட்ட மூத்த குடிமக்கள் பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்பதிவு இன்றி தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள விரும்புவோர் MySejahtera செயலியில் உள்ள மின்னிலக்க தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் தடுப்பூசி போடும் நடவடிக்கை சுமூகமாக நடைபெறும் என்றும் அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 6:32 pm
விடிஆர் விசாவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: குடிநுழைவுத் துறை
March 29, 2024, 6:30 pm
நிர்வாகியை பேங்க் நெகாரா பணி நீக்கம் செய்தது நியாயமற்றது: நீதிபதி
March 29, 2024, 5:40 pm
இலவச டோல் சேவை கட்டணம் நீட்டிக்கப்படாது: அஹ்மத் மஸ்லான்
March 29, 2024, 5:33 pm
அல்லாஹ் காலுறை விவகாரம்: சுல்தான் நஸ்ரின் கவலை
March 29, 2024, 5:32 pm
லஞ்சம் வாங்கிய 34 அரசு ஊழியர்களை எம்ஏசிசி கைது செய்தது
March 29, 2024, 5:18 pm