நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

6-ஆம் வகுப்பு தேர்வில் கரீனா கபூரின் மகன் குறித்த கேள்வி

கண்ட்வா:

மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில்  6ஆம் வகுப்புத் தேர்வில் ஹிந்தி நடிகை கரீனா கபூரின் மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்புப் பொது அறிவுத் தேர்வு நடைபெற்றது.  

அந்தத் தேர்வில் நடிகை கரீனா கபூர் மகனின் முழுப் பெயரை எழுதக் கூறி கேள்வி இடம்பெற்றிருந்தது. அந்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதுகுறித்து விளக்கமளிக்குமாறு அந்தப் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

பள்ளி நிர்வாகத்திடமிருந்து பதில் கிடைத்த பின்னர், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேச நலன் சார்ந்த அறிவை மேம்படுத்தும் விதத்தில்தான் மாணவர்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset