செய்திகள் சிந்தனைகள்
கொஞ்சம் உலக அருங்காட்சியகங்கள் பற்றியும் அறிவோமா? திப்பு சுல்தான் எனும் விடுதலை வீரன்: - சுபாஷினி ஜெர்மனி
கட்டுரையாளர் முனைவர் சுபாஷினி தொல்லியல் ஆய்வில் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். உலகெங்கும் தரவுகளைத் தேடி பயணப்பட்டுக் கொண்டிருப்பவர். எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர் என்று பன்முக ஆளுமை கொண்டவர். தற்போது ஜெர்மனியில் லியோன்பெர்க் நகரில் வாசிக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவராக பல பணிகளை முன்னெடுத்து வருபவர். லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய விடுதலை வீரர் திப்பு சுல்தானின் அரும்பொருள்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் ககூறி இருக்கிறார். கட்டுரையாளர் சுபாஷினி பினாங்கில் பிறந்தவர்.
இன்றைக்கு இங்கிலாந்தில் லண்டனில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் உள்ள சுவாரசியமான ஒரு அரும்பொருளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஆரம்ப காலத்தில் எதிர்த்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் திப்பு சுல்தான். இவர் மைசூரில் அதாவது இன்றைய கர்நாடகா பகுதியில் ஆட்சி புரிந்தவர். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை மிகத் தீவிரமாக எதிர்த்தவர்.
1782 ஆம் ஆண்டு இவரது தந்தை ஹைதர் அலி இறந்த பின்னர் தனது 32ஆவது வயதில் சுல்தானாக பதவியேற்றார்.
புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைத் தனது நாட்டின் சின்னமாக அவர் பயன்படுத்தினார். தனது போர் ஆயுதங்கள், தனது ராணுவத்தின் சின்னமாகவும் வீரர்களில் உடையில் சின்னமாகமும் புலிச்சின்னத்தைப் பயன்படுத்தினார். அவரது சிம்மாசனமும் தங்கமுலாம் பூசப்பட்ட மரத்தாலான புலி உருவம் கொண்ட ஆசனமாக உருவாக்கப்பட்டிருந்தது.
திப்பு சுல்தானிற்காக ஒரு மரத்தாலான இயந்திரத்துடன் கூடிய ஒரு பொம்மை அன்று உருவாக்கப்பட்டது. அதில் ஒரு ஆங்கிலேய அதிகாரியை திப்புவின் புலி ஏறி அடித்துக் கொல்வதைப் போல இது அமைக்கப்பட்டிருந்தது.
இந்த மர பொம்மை திப்பு சுல்தானின் ஆங்கிலேயர்கள் மேலான வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. 71.2 செ.மீ உயரமும் 172 செ.மீ நீளமும் கொண்டது இது.
கிழக்கிந்திய கம்பெனி திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனையை 1799ஆம் ஆண்டு தாக்கிக் கைப்பற்றிய போது அங்கு கண்டெடுக்கப்பட்டு பின்னர் அன்றைய ஆளுநர் லோர்ட் மோர்னிங்டனால் பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த மர பொம்மை.
பிரித்தானிய பொது மக்களுக்காக இந்த பொம்மை லண்டன் நகரில் 1808 ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா ஹவுஸ் (East India House) கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1880 ஆம் ஆண்டு லண்டன் நகரில் இருக்கும் மிகப் புகழ் வாய்ந்த Victoria and Albert Museum அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அங்கு தற்சமயம் இது பாதுகாக்கப்படுகிறது.
இந்தப் புலி பொம்மையின் உடலிலேயே 18 இசைக்கட்டுகளுடன் கூடிய சிறிய ஆர்கன் இசைக்கருவி ஒன்றும் இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்கனின் ஒரு பக்க கம்பியை இழுத்தால் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் அச்சத்தில் அலறுவது போன்ற ஒலி அதிலிருந்து எழும்பும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே திப்பு சுல்தான் பற்றிய விளக்கமும் அவரது கிழக்கிந்திய கம்பெனி எதிர்ப்பு சிந்தனைகளை விளக்கும் விவரக் குறிப்பும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
மைசூரை 1799ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படைகள் தாக்கியபோது திப்பு சுல்தான் போரில் கொல்லப்பட்டார். ஆங்கிலேய ராணுவம் மைசூர் நகரையும் அரண்மனையையும் கொள்ளையடித்தது. ஏராளமான அரும்பொருட்கள் திருடப்பட்டன.
இந்திய சுதந்திர சிந்தனையை வெளிப்படுத்திய திப்பு சுல்தானின் பெயரை இங்கிலாந்தில் இன்றும் நினைவு படுத்தும் ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்த புலி பொம்மை திகழ்கிறது.
- சுபாஷினி ஜெர்மனி
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 6:48 am
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
March 15, 2024, 7:40 am
ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை
March 6, 2024, 12:21 pm
ஆரியத்தை வீழ்த்தி திராவிடத்தை காத்தவர்கள் குறித்து ஆளுநர் ரவியின் நச்சுக் கருத்துகள்
March 4, 2024, 10:50 pm
அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?
March 1, 2024, 3:28 am
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
February 23, 2024, 9:12 am
நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை
February 16, 2024, 8:18 am
எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை
February 9, 2024, 7:56 am
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும் நபிமொழியும்..! - வெள்ளிச் சிந்தனை
February 2, 2024, 8:31 am
நன்றி செலுத்த வேண்டாமா...? - வெள்ளிச் சிந்தனை
January 19, 2024, 9:48 am