நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் புக்கிட் திங்கியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக 3 சந்தேக நபர்கள் கைது: போலிஸ்

ஷாஆலம் -

கிள்ளான், புக்கிட் திங்கியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 சந்தேக நபர்களை போலிசார் கைது செய்தனர்.

சிலாங்கூர், புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத  ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக
19 முதல் 35 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் கிள்ளானைச் சுற்றி கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக இதுவரை மூன்று பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மூவரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தடுப்பு காவல் வரும் திங்கட்கிழமை முடிவடைகிறது.

விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே வழக்கின் உணர்திறனை ஏற்படுத்துவதால் நான் விரிவாக கருத்து தெரிவிக்க முடியாது.

இன்று சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் போதைப்பொருள் வழக்குப் பொருட்கள், விசாரணை ஆவணங்களை அப்புறப்படுத்திய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset