செய்திகள் மலேசியா
சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள் குறித்து ரக்கான் வலைத்தளத்தில் புகாரளிக்கலாம்: சரஸ்வதி
கோலாலம்பூர்:
சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏதுவாக தேசிய பொது புகார் வலைத்தளமான rakan - e-Sepakat வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களின் புகார்களை பதிவு செய்யலாம்.
தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இதன் மூலம் பெறப்படும் புகார்களை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு கண்காணித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இதன் மூலம் மக்கள் மத்தியில் நிலவி வரும் ஒற்றுமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
முன்னதாக, e-Sepakat வலைத்தளம் வாயிலாக சமூகத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்ட ஒருமைப்பாட்டு அமைச்சு எந்த வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது என பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் பின் சாட் எழுப்பிய கேள்விக்கு செனட்டர் சரஸ்வதி மக்களவையில் இவ்வாறு பதிலளித்தார்.
சமூகத்தில் ஏற்படவிருக்கும் ஒற்றுமை சார்ந்த பிரச்சினைகளை முன்னதாக தடுப்பது, இனம், மதம் சார்ந்த பிரச்சினைகள், பிற மதத்தை இழிவுப்படுத்துதல், அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் பதற்ற நிலையை உருவாக்குதல் போன்ற செயல்களுக்கு எதிராக பொதுமக்கள் இந்த வலைத்தளத்தில் புகார் அளிக்கலாம்.
நாட்டு மக்களிடையே அமைதி நிலவவும், ஒற்றுமையை மேம்படுத்தவும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு எல்லா வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். https://rakan.jpnin.gov.my
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு: பிஎஸ்எம் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது
November 12, 2025, 9:35 pm
சபா தேர்தல்: தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ரஹ்மான் டஹ்லான் விலகல்
November 12, 2025, 9:34 pm
போலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் வழக்குப் பதிவு
November 12, 2025, 9:32 pm
இணைய பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க 30 இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு
November 12, 2025, 1:33 pm
பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை அரசாங்கம் கைவிடாது: டத்தோஸ்ரீ ரமணன்
November 12, 2025, 1:08 pm
