செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்ளுக்கான தொடர் கெடுபிடிகள்; உணவகத் துறையின் அழிவுக்கு வித்திடலாம்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
கோலாலம்பூர்:
அந்நிய தொழிலாளர்ளுக்கான தொடர் கெடுபிடிகள் உணவகத் துறையின் அழிவுக்கு வித்திடலாம்.
மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை கூறினார்.
நாட்டில் உணவகம் துறை மிகப் பெரிய தொழில் துறையாக உள்ளது. நாட்டின் வருவாய்க்கு மிகப் பெரிய பங்களிப்பை தருகிறது. அதே வேளையில் இத்தொழில் துறைக்கு தான் அதிகமான அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் அத்தொழிலாளர்கள் கிடைப்பது மிகப் பெரிய இழுப்பறியாகவே இருந்து வருகிறது.
ஈராண்டுகளுக்கு முன் இத்தொழில் துறைக்கு அந்நிய தொழிலாளர்கள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் தற்போது கந்தியான் என்று மாற்று தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கந்தியான் திட்டம் வாயிலாக அந்நிய தொழிலாளர்கள் கிடைப்பது எளிதான விஷயம் அல்ல.
ஆயிரத்தெண்டு விதிமுறைகள் உள்ளது. அதை எல்லாம் மீறி அந்நிய தொழிலாளர்கள் பெறுவது எளிது அல்ல.
இப்படி பல கெடுப்பிடிகளால் ஏற்படும் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலை நீடித்தால் உணவகத் துறைக்கு அழிவுக்கு வித்திடலாம்.
நாட்டின் வருமானத்திற்கு மிகப் பெரிய பங்கை வகிக்கும் உணவகத் துறையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.
அதை விடுத்து உணவகத் துறை அழிவை பார்க்கக் கூடாது. ஆக உணவகத் துறையை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்விகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் பிரதமருக்கு மைக்கியின் சார்பில் மனு அனுப்பப்பப்டும்.
உணவகத் துறைக்கு புதிய அந்நிய தொழிலாளர்கள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டப்படும்.
மைக்கி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி முகமட் மோசின், பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு: பிஎஸ்எம் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது
November 12, 2025, 9:35 pm
சபா தேர்தல்: தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ரஹ்மான் டஹ்லான் விலகல்
November 12, 2025, 9:34 pm
போலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் வழக்குப் பதிவு
November 12, 2025, 9:33 pm
சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள் குறித்து ரக்கான் வலைத்தளத்தில் புகாரளிக்கலாம்: சரஸ்வதி
November 12, 2025, 9:32 pm
இணைய பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க 30 இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு
November 12, 2025, 1:33 pm
பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை அரசாங்கம் கைவிடாது: டத்தோஸ்ரீ ரமணன்
November 12, 2025, 1:08 pm
