நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் எண்ணெய் வளம் கூட்டு முயற்சிகளின் விளைவாகும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

நாட்டின் எண்ணெய் வளம் கூட்டு முயற்சிகளின் விளைவாகும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

மலேசியாவின் செழிப்பு, வளங்கள் நிறைந்த சபா, சரவாக் இடையேயான ஒத்துழைப்பிலிருந்து வந்தது.

அந்த திறனைத் திறக்க மத்திய அரசு நிபுணத்துவம், மூலதனம், உள்கட்டமைப்பை வழங்குகிறது.

மலேசியாவின் பெட்ரோலிய வளம் ஒரு தரப்பினரால் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஒன்றல்ல.

மாறாக இயற்கை வளங்கள், கூட்டரசு தொழில்நுட்ப திறன்களின் கலவையின் மூலம் என்று துன் மகாதீர் கூறினார். 

மேலும் அப்போது எண்ணெய் எடுக்கப்படவில்லை.

அவர்கள் இருவரும் சேர்ந்து மலேசியாவை உருவாக்கிய பிறகுதான், சபா, சரவாக்கில் உள்ள எண்ணெய், எரிவாயு ஆற்றலை நாம் ஆராய முடியும். 

எனவே, கூட்டமைப்பில் இணைந்ததன் மூலம் அவர்கள் பணக்காரர்களாக மாறினர்.
குறிப்பாக மலேசியா உருவாக்கப்பட்டபோது சபாவும் சரவாக்கும் மிகவும் ஏழை மாநிலங்களாக இருந்தன.

அதன் பிறகு ஏற்பட்ட மாற்றம் ஒரு கட்சியின் முயற்சியால் மட்டுமல்ல, குழுப்பணியால் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset