செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபாவின் 3 முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும்: மொஹைதின்
கோத்தா கினபாலு:
தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபா மாநிலத்தின் 3 முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.
இந்த மாத இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சிக்கு ஆணை வழங்கப்பட்டால், தண்ணீர், மின்சாரம், சாலைகள் ஆகிய மூன்று பிரச்சனைகளும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படும்.
சபா மக்களை மீண்டும் மீண்டும் பாதிக்கும் பிரச்சினைகள் தெளிவான, திட்டமிடப்பட்ட நடவடிக்கை இல்லாமல் தொடர அனுமதிக்க முடியாது.
சபாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் தேசியக் கூட்டணி உறுதிப்பாட்டையும் அவர் கூறினார்.
தேசியக் கூட்டணி வெறும் பேசுவதை மட்டும் விரும்பவில்லை.
மாறாக நிறைவேற்றப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ வாக்குறுதியாக கருப்பு வெள்ளை ஆவணத்தின் வடிவத்தில் உறுதிமொழியைச் செய்கிறது என்று அவர் கூறினார்.
சபா மாநிலத் தேர்தலுக்கான 40 தேசியக் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்த அவர் தனது உரையில் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
கம்போங் ஜாலான் பாப்பான் வீடுகள் உடைப்பு: பிஎஸ்எம் அருட்செல்வம் உட்பட 3 பேர் கைது
November 12, 2025, 9:35 pm
சபா தேர்தல்: தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ரஹ்மான் டஹ்லான் விலகல்
November 12, 2025, 9:34 pm
போலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் வழக்குப் பதிவு
November 12, 2025, 9:33 pm
சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள் குறித்து ரக்கான் வலைத்தளத்தில் புகாரளிக்கலாம்: சரஸ்வதி
November 12, 2025, 9:32 pm
இணைய பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க 30 இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு
November 12, 2025, 1:33 pm
பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை அரசாங்கம் கைவிடாது: டத்தோஸ்ரீ ரமணன்
November 12, 2025, 1:08 pm
