செய்திகள் விளையாட்டு
சுஸுகி கிண்ணம்: இரு மலேசிய வீரர்களுக்கு தொற்றுப் பாதிப்பு
கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் நடைபெறும் சுஸுகி காற்பந்து கிண்ணப் போட்டியில் பங்கேற்றுள்ள மலேசிய அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று நடைபெற இருந்த மலேசிய, கம்போடிய அணிகள் மோத இருந்த போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான இரு வீரர்களும் பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது. இவர்களில் அணியின் கோல் கீப்பரும் அடங்குவார்.
இந்த எதிர்பாராத நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது என்ற போதிலும் அணியின் பயிற்சி பாதிக்கப்படாது என்றும், போட்டியை எதிர்கொள்ள வீரர்கள் தயாராக உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் சுஸுகி கிண்ணப் போட்டியின் வெற்றியாளராக வேண்டும் எனும் துடிப்புடன் மலேசிய அணி இம்முறை களம் காண்கிறது. இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு மலேசியா இந்தக் கிண்ணத்தை வென்றிருந்தது.
அதன் பிறகான நீண்ட காத்திருப்பு இம்முறை முடிவுக்கு வரும் எனன எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு மலேசியா மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும், ஒருமுறை மட்டுமே வெற்றியை ருசிக்க முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
April 18, 2024, 9:57 am
23 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி; உஸ்பெகிஸ்தானிடன் மலேசியா தோல்வி
April 18, 2024, 9:47 am
இளைஞர் சங்கங்கள், கிளப்புகள் தரமான உள்ளூர் விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும்: எஃப் ஏ எம்
April 18, 2024, 8:46 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் ஹிலால் தோல்வி
April 18, 2024, 8:39 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணம் மென். சிட்டி, அர்செனல் ஏமாற்றம்
April 17, 2024, 5:17 pm
பார்சிலோனா பொது டென்னிஸ்: நடால் வெற்றி
April 17, 2024, 10:49 am
பாரிஸ் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றம்- தொடர் ஓட்டம் தொடங்கியது
April 17, 2024, 9:34 am
மோசமான வானிலை: ஸ்ரீ பகாங் அணி பங்கேற்ற ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது
April 17, 2024, 8:46 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
April 16, 2024, 5:33 pm