நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சுஸுகி கிண்ணம்: இரு மலேசிய வீரர்களுக்கு தொற்றுப் பாதிப்பு

கோலாலம்பூர்:

சிங்கப்பூரில் நடைபெறும் சுஸுகி காற்பந்து கிண்ணப் போட்டியில் பங்கேற்றுள்ள மலேசிய அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நடைபெற இருந்த மலேசிய, கம்போடிய அணிகள் மோத இருந்த போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதியான இரு வீரர்களும் பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது. இவர்களில் அணியின் கோல் கீப்பரும் அடங்குவார்.

இந்த எதிர்பாராத நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது என்ற போதிலும் அணியின் பயிற்சி பாதிக்கப்படாது என்றும், போட்டியை எதிர்கொள்ள வீரர்கள் தயாராக உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் சுஸுகி கிண்ணப் போட்டியின் வெற்றியாளராக வேண்டும் எனும் துடிப்புடன் மலேசிய அணி இம்முறை களம் காண்கிறது. இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு மலேசியா இந்தக் கிண்ணத்தை வென்றிருந்தது.

அதன் பிறகான நீண்ட காத்திருப்பு இம்முறை முடிவுக்கு வரும் எனன எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு மலேசியா மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும், ஒருமுறை மட்டுமே வெற்றியை ருசிக்க முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset