நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி

கோலாலம்பூர்:

கடந்த 2023 ஜனவரியில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்னும் அம்னோவில் மீண்டும் சேர விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவில்லை.

கைரியின் வெளியேற்றம் மூன்று ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அவர் கட்சிக்குத் திரும்ப விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்.

ஆனால் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது அம்னோ உச்ச மன்றத்தால் தீர்மானிக்கப்படும் என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அசிராப் வாஜ்டி துசுகி கூறினார்.

கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் வெளியேற்றப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள அம்னோ தயாராக உள்ளது.

ஆனால் அம்னோ சட்டம் ஒழுங்கு விஷயங்களைத் தீர்மானிப்பதற்கும் வெளியேற்றப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்ப்பதற்கும் மிக உயர்ந்த அமைப்பான உச்ச்மன்ற குழுவால் மட்டுமே அவர்களின் ஏற்பு தீர்மானிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset