செய்திகள் மலேசியா
பிரதமர் வேட்பாளரை அறிவிக்க பாஸ் கட்சி விரும்பாதது ஏன்?: துன் மகாதீர் விளக்கம்
கோலாலம்பூர்:
தனது சொந்த அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆதரவு இன்னும் கட்சிக்கு இல்லை என்பதை உணர்ந்ததால், பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்க பாஸ் முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது இதனை கூறினார்.
கிழக்கு கடற்கரையில் உள்ள அவர்களின் பாரம்பரிய தொகுதிகளுக்கு வெளியே, புத்ராஜெயாவை கட்டுப்படுத்த போதுமான இடங்களை பாஸ் வெல்ல முடியாது என்பதை அக்கட்சி உணர்ந்தது.
பிரதமர் வேட்பாளரை மிக விரைவாக அறிவிப்பது, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களிடமிருந்து கட்சிக்கு அதிக ஆதரவைப் பெறுவதை கடினமாக்கும்.
பாஸ் கட்சிக்கு தாங்களாகவே பிரதமராக முடியாது என்பது தெரியும்.
நாடு முழுவதும் உள்ள பிற கட்சிகளின் ஆதரவு அவர்களுக்குத் தேவை.
அவர்களிடம் உள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க போதுமானதாக இல்லை.
எனவே அவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதனால்தான் அவர்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று துன் மகாதீர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
முதுகுவலி காரணமாக பிரதமர் பகாங்கிற்கான பயணத்தை ரத்து செய்தார்
November 2, 2025, 10:10 am
மூவார் மக்களுக்காக சைட் சாடிக் 1 மில்லியன் ரிங்கிட்டை திரட்டினார்
November 2, 2025, 9:37 am
கோலோக்கில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மலேசியர் படுகாயம்
November 1, 2025, 4:21 pm
