செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் மீண்டும் தக்காளி விலை 100ஐத் தொட்டது
சென்னை:
சென்னையில் தக்காளி விலை மீண்டும் நூறு ரூபாயை எட்டியுள்ளதாக கோயம்பேடு காய்கறி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளியின் வரத்து குறைந்ததன் காரணமாக, விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 40முதல் 50வாகனங்களில் மட்டுமே தக்காளி வருவதாகக் கூறுகின்றனர்.
கோயம்பேடு சந்தையில், நேற்று 70ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டுத் தக்காளி, தற்போது 80ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
80ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நவீன் தக்காளி 90 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில்லரை விலையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 100ரூபாய்க்கும், நவீன் தக்காளி 110 முதல் 120ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm
தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
April 19, 2024, 12:32 pm