நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசு மக்களின் புகார்களை கேட்பதுடன் உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது: பிரதமர்

போர்ட்டிக்சன்:

மடானி அரசு மக்களின் புகாரை கேட்பதுடன் உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும்,

தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள மடானி அரசாங்கம் எப்போதும் மக்களின் குறைகளைக் கேட்கும்.

நாளை அல்லது நாளை மறுநாள் முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது.

நாம் என்ன அறிவிக்கப் போகிறோம்? ஏன் முன்னதாகவே அறிவிக்கவில்லை என பல கேள்விகள் எழுகிறது.

இது குறித்து நிதி அமைச்சு, பொருளாதார அமைச்சு, தொடர்புடைய அமைச்சு அதிகாரிகளுடன் விவாதித்த பின் இந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

தேவையான நடவடிக்கைகளை எடுத்தாலும், மைக்ரோ-பொருளாதாரம், நல்ல பொருளாதார வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், குறைந்த வேலையின்மை ஆகியவற்றின் அடிப்படையில், நாங்கள் கீழே இறங்கி மக்களைக் கேட்கிறோம்.

ஆனால் அடிமட்ட மட்டத்தில் இன்னும் கொஞ்சம் பதட்டம் உள்ளது

எனவே மடானி அரசாங்கம் அடிமட்ட மக்களின் பேச்சைக் கேட்க வேண்டியிருப்பது குறித்து கவலை கொண்டுள்ளது.

எனவே பதட்டம் இருப்பதாகக் கேள்விப்படும்போது, அதைத் தணிக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்போம் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset