
செய்திகள் மலேசியா
தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் உதவி வழங்கினார் வ.சிவகுமார்
ஈப்போ:
இங்குள்ள ஜெலப்பாங் தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத் திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் மானியம் வழங்கி உதவினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வ.சிவகுமார். அவரின் நிதியுதவிக்கு நன்றி கூறினார் ஆலயத்தலைவர் சா.தினகரன்.
தற்போது இந் நிதியுதவி வாயிலாக 80 சதவீத ஆலயத்திருப்பணி வேலைகள் முடிவடைந்துள்ளதாக அவர் சொன்னார். ஆலயத் திருப்பணிகள் முற்றுப்பெற்றவுடன் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆலயத்திற்கு உதவி கேட்டு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரை அணுகியபோது, அவர் 1 இலட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு 2024 ல், 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியை ஆலயத்திற்கு வழங்கினார் என்று அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டில் மேலும் 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி வழங்கிய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமாருக்கு ஆலய சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சா.தினகரன் கூறினார்.
ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2025, 6:35 pm
புத்ரா ஹைட்ஸ் தேவி ஸ்ரீ மகா ராஜகாளியம்மன் ஆலயம் அதிகாரப்பூர்வமாக மஹிமாவில் இணைந்துள்ளது
July 20, 2025, 5:43 pm
கடும் சவால்களுக்கு மத்தியில் தங்க கணேசன் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவரானார்
July 20, 2025, 3:55 pm
சிலாங்கூர் அனைவருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக அமைந்துள்ளது: அமிருடின் ஷாரி
July 20, 2025, 2:36 pm
கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை மடானி அரசின் அடித்தளமாக உள்ளது: பிரதமர் அன்வார்
July 20, 2025, 1:29 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகம் தொடரும்: கிளந்தான் உலாமா நம்பிக்கை
July 20, 2025, 1:26 pm