நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

15 மணிநேரப் பயணத்துக்குப் பிறகு நாடு திரும்பிய குவாண்டஸ் விமானம்

பெர்த்:

ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட குவாண்டஸ் ஏர்வேஸ் விமானம் கிட்டத்தட்ட 15 மணிநேரப் பயணத்துக்குப் பிறகு நாடு திரும்பியது.

போயிங் 787 ஜெட் விமானம் பெர்த்தில் இருந்து வழக்கமான 17 மணி நேர பயணத்திற்காக பாரிசுக்குப் புறப்பட்டது.

இந்நிலையில்  ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு வான்வெளியின் பெரும்பகுதி மூடப்பட்டது.

ஏவுகணைத் தாக்குதல் குறித்து விமான நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டபோது, ​​அது இந்திய வான்வெளியின் தென்மேற்கு எல்லைகள் வரை சென்றிருந்தது.

இதனால் அது திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 மணி நேர பயணத்திற்கு பின் மேற்கு ஆஸ்திரேலிய தலைநகரில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

பெர்த்தில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்துக்குச் செல்லும் மற்றொரு குவாண்டஸ் விமானமும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக குவாண்டஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset