
செய்திகள் மலேசியா
மூத்த நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையிலிருந்து அன்வார் விலக வேண்டும்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
மூத்த நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையிலிருந்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விலக வேண்டும்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
துன் மகாதீர் தலைமையிலான நீதித்துறை அமைப்பின் பாதுகாப்பு செயலகத்தின் கூட்டம் நேற்று தலைநகரில் நடைபெற்றது.
இந்த வட்டமேசைக் கூட்டத்துடன் இணைந்து ஒப்புக் கொள்ளப்பட்ட ஆறு தீர்மானங்களில் இந்த அழைப்பும் ஒன்றாகும்.
டத்தோஶ்ரீ அன்வாரின் முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் முகமது யூசோப் ராவ்தர் தாக்கல் செய்த வழக்கைக் குறிப்பிடுகையில், அவரது நீதிமன்ற வழக்கு தீர்க்கப்படும் வரை பிரதமர் பதவியில் இருந்து விடுப்பு எடுக்கவும் செயலகம் முன்மொழிந்தது.
மேலும் அவர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட வழக்குகள் காரணமாக அவர் பதவியில் இருக்கும் வரை நீதி நிர்வாகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான கருத்து அல்லது சாத்தியக்கூறு இருக்கும்.
நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகளின் கடமைகளை ஏற்க பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் தகுதிகள், நேர்மை, மூப்புத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
அரசியல் தொடர்புகள் அல்லது விருப்பங்களின் அடிப்படையில் அல்ல என்று துன் மகாதீர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2025, 12:11 pm
சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
July 20, 2025, 11:02 am
துன் மகாதீர் ஆலோசகரானால், தேசியக் கூட்டணியின் பிரதமர் செல்வாக்கு குறையும்: அரசியல் ஆய்வாளர்
July 20, 2025, 10:03 am
பகாங் ஜேபிஜே இயக்குநர் பெயர் கொண்ட தற்காலிக வாகன நுழைவு அனுமதி போலியானது: ஜேபிஜே
July 19, 2025, 9:08 pm
ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்
July 19, 2025, 9:08 pm
மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்
July 19, 2025, 5:04 pm