நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவநேசனின்தொலைநோக்கு முன்னெடுப்பு: மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு

கோலாலம்பூர், 

பேராக் மாநிலத்தில் இந்துக் கோயில்களை நிலைநிறுத்த மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம் அவர்களின் தொலைநோக்கு முன்னெடுப்பு - மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு

பேரா மாநில அரசு இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்து ஆலயங்கள் தொடர்பான எதிர்மறை சொல்லாடல்களைக் கொண்ட சர்ச்சைக்குள்ளான சுற்றறிக்கையை மீட்டுக் கொண்டதை மலேசிய இந்துதர்ம மாமன்றம் பெரிதும் வரவேற்கிறது. அதே வேளையில் புதிய கோயில்களைக் கட்டுவதற்கு முறையான ஆவணங்களைக் கொண்டு செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாமல் பரிசீலிக்கப்படும் என்று செய்யப்பட்ட அறிவிப்பையும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பெரிதும் வரவேற்கிறது.

நிலப் பிரச்சனையை எதிர்நோக்கியிருந்த 10 ஆலயங்களுக்குத் தீர்வு கண்டுள்ளதற்கும் இன்னும் நிலுவையில் உள்ள 17 ஆலயங்களின் நிலப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் நன்றி கூறிக்கொள்கிறது.

தொடர்ந்து ஆலயங்களை முறையாக வழிநடத்த நிர்வாக உறுப்பினர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த பேரக் மாநில அர்சு ஒரு லட்சம் ரிங்கிட் ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் பயிற்சி பட்டறைகள் ஆலயங்களை வழிநடத்தி வரும் அனைவருக்கும் மிகப் பயனானதாக அமையும் என்பது திண்ணம்.

பேரா மாநிலத்திலுள்ள அரசு பொது மருத்துவமனை வருகையாளர் செயற்குழுவில் முதன் முறையாக இந்து சமயம் சார்ந்த பிரதிநிதிகளை நியமித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன் வழி இந்துக்களின் விவகாரங்களை கவனித்து ஒரு சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஏதுவாக இருக்கும்.

பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம் அவர்கள் ஒரு ஆட்சிக்குழு உறுப்பினர் எவ்வாறு மக்களின் மேம்பாட்டிற்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்குவதை மலேசிய இந்துதர்ம மாமன்றம் பாராட்டுகிறது. தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், சமய இயக்கங்கள், பொது இயக்கங்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அயராமல் கடுமையாகவும் நேர்மையாகவும் அவர் பணியாற்றி வருவதைக் கண்டு மலேசிய இந்துதர்ம மாமன்றம் பெருமிதம் கொள்கிறோம்.

இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்துக் கோயில்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு, மாநிலச் சட்டத்திட்டத்திற்கு உட்பட்ட நிலையில், மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம் அவர்கள் திட்டமிட்டு நீண்ட கால தீர்வுகளை நோக்கி பணியாற்றி வருவதை மாமன்றம் பாராட்டுவதோடு அவருக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- இது மலேசிய இந்து தர்மம் வெளியிட்ட அறிக்கை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset