செய்திகள் சிந்தனைகள்
ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் தமிழாக்கம் வெளியீடு: தகவல் ஒளிபரப்புத்துறை மூத்த அதிகாரி சஞ்சய் கோஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்
ஷார்ஜா :
ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 40வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் பாரசீக நூலான மஸ்னவி ஷரீஃப் தமிழ் மொழியாக்கத்தின் ஆறாம் பாகம் வெளியீடு கண்டது..
'மஸ்னவி' என்பதற்கு 'ஈரடி அர்த்தம்' என பொருள்படும். இரண்டு வரிகளில் கவிதை மூலம் திருமறை, நபிமொழி விளக்கம், தத்துவம், கதை, ஆன்மிகம், வரலாறு, ஒப்பீடு, விளக்கம், நாடகம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.
பல்வேறு ஞான அகமியங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களது பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி நடப்பது சிறப்புக்குரியது என்றார் தலைமை வகித்த முஹம்மது மஃரூப்.
உலகப் புகழ்பெற்ற இந்த நூல் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களால் 12 ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் இயற்றப்பட்டது ஆகும். இதனை தமிழில் நரியம்பட்டு எம்.ஏ. ஸலாம் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். சென்னை, கூடுவாஞ்சேரியில் உள்ள ஃபஹீமிய்யா டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.
இந்தத் தமிழ் நூலை முஹம்மது மஃரூப் வெளியிட இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புத்தக வெளியீட்டுத்துறையின் மேலாளர் சஞ்சய் கோஷ் பெற்றுக் கொண்டார். அதனையடுத்து புதுக்கோட்டை காதர் ஹுசைன், காயல் மீரான் மூசா, கிரீன் குளோப் ஜாஸ்மின் அபுபக்கர், கவிஞர் கவிதா சோலையப்பன், ஏகத்துவ மெய்ஞான சபையின் கலிபா முஸ்தபா, இளையான்குடி செய்யது அபுதாஹிர் உள்ளிட்ட பலர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட இந்திய அரசு வர்த்தகத்துறையின் அதிகாரி சுனில் குமார் சிறப்பு செய்யப்பட்டார்.
ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 6:48 am
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
March 15, 2024, 7:40 am
ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை
March 6, 2024, 12:21 pm
ஆரியத்தை வீழ்த்தி திராவிடத்தை காத்தவர்கள் குறித்து ஆளுநர் ரவியின் நச்சுக் கருத்துகள்
March 4, 2024, 10:50 pm
அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?
March 1, 2024, 3:28 am
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
February 23, 2024, 9:12 am
நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை
February 16, 2024, 8:18 am
எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை
February 9, 2024, 7:56 am
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும் நபிமொழியும்..! - வெள்ளிச் சிந்தனை
February 2, 2024, 8:31 am
நன்றி செலுத்த வேண்டாமா...? - வெள்ளிச் சிந்தனை
January 19, 2024, 9:48 am