நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஃப்ஆர்யு அதிகாரிகள் மரணமடைந்த விபத்தில் தொடர்புடைய லோரி ஓட்டுநர் மீது 6 குற்றப் பதிவுகள் உள்ளன: போலிஸ்

கோலாலம்பூர்:

எஃப்ஆர்யு அதிகாரிகள் மரணமடைந்த விபத்தில் தொடர்புடைய லோரி ஓட்டுநர் மீது 6 குற்றப் பதிவுகள் உள்ளன.

தேசிய போலிஸ்படையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை இதனை கூறினார்.

நேற்று தெலுக் இந்தானில் நடந்த விபத்தில் 9 எஃப்ஆர்யு அதிகாரிகள் மரணமடைந்தனர்.

இந்த விபத்தில் தொடர்புடைய லோரி ஓட்டுநர் மீது பல முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளன.

45 வயதான அந்த ஓட்டுநரிடம் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு, ஒரு போதைப்பொருள் வழக்கு நான்கு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு சோதனையில் கண்டறியப்பட்டது.

இருப்பினும், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக சிறைத்தண்டனை உட்பட அனைத்து குற்றங்களுக்கும் ஓட்டுநர் ஏற்கனவே தண்டனை பெற்றுள்ளார் என்று அவர் கூறினார்.

சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது, முடிவு எதிர்மறையாக இருந்தது. 

சந்தேக நபர் கெட்டம் வைத்திருந்ததாகக் கூறப்படுவது உண்மையல்ல என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset