செய்திகள் உலகம்
மூன்று நாட்கள் அலுவலகம்; இரண்டு நாட்கள் வீடு: சுந்தர் பிச்சை அறிவித்த புதிய ஹைப்ரிட் திட்டம்
கலிபோர்னியா:
ஊழியர்கள், ஒருங்கிணைந்து ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து பணியாற்றுவதற்கு, ஒரு கம்யூனிட்டியாக ஊழியர்கள் வளர்வதற்கும் அலுவலகத்திற்கு வர சொல்வதற்கான முக்கியமான காரணமாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலமாக அனைவருமே வீட்டிலிருந்தபடியே தான் வேலை செய்து வருகின்றனர். வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது அனைருடைய வாழ்விலும் கலந்துவிட்டது.
தற்போது கொரோனா தொற்றுப்பரவல் குறைந்திருக்கும் நிலையில் பல நிறுவனங்களும் அலுவலகங்களைத் திறக்கலாமா? என்ற யோசனையில் உள்ளனர். சில நிறுவனங்களில் ஏற்கனவே மிகக் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
வீட்டில் இருந்தே வேலை செய்வது கிட்டத்தட்ட அனைவருக்கும் பழகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வது கடினமாக இருக்குமா? இந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்வது என்று பலரின் கேள்வியாக இருக்கிறது.
பல பெரு நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களின் விருப்பத்தையும் நலனையும் முன்னிலைப்படுத்துகின்றன. அவற்றில் முதன்மையாக இருப்பது கூகுள் நிறுவனம். இதற்கு தீர்வு அளிக்கும் விதமாக ஹைபிரிட் ஒர்க்கிங் திட்டம் என்பதை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
இந்த ஹைபிரிட் திட்டத்தின்படி, வாரத்தில் பாதி நாட்கள் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யலாம்; இதர நாட்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம்.
ஊழியர்களுக்கு வொர்க்-லைஃப் பேலன்ஸ் தேவை. எனவே, பின் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றினால் போதும் மீதமுள்ள நாட்களை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்னும் திட்டம் பற்றி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
"Flexible work week" எனப்படும் இந்த திட்டத்தை கூகுள் நிறுவனம் ஏற்கனவே கடந்த டிசம்பர் 2020 அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி தோராயமாக வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திலும் மற்றும் இரண்டு நாட்கள் ஊழியர்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் இருந்து வேலை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
ஊழியர்கள், ஒருங்கிணைந்து ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து பணியாற்றுவதற்கு, ஒரு கம்யூனிட்டியாக ஊழியர்கள் வளர்வதற்கும் அலுவலகத்திற்கு வர சொல்வதற்கான முக்கியமான காரணமாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மீதமுள்ள உள்ள இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்தோ பணியாற்றுவது, அலுவலகத்திற்கு வந்து செல்லும் பயண நேரத்தை தவிர்க்க உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹைபிரிட் வொர்கிங் திட்டம் பற்றி விவரங்களை பிச்சை அவர்கள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எடிட்டரிடம் பகிர்ந்துள்ளார். இந்த மூன்று நாட்கள் அலுவலகம் மற்றும் எனது நாட்கள் வீடு அல்லது ஊழியர்கள் விரும்பும் இடத்திலிருந்து பணியாற்றுவது என்பது நிறுவனத்தின் நிரந்தரமான மாற்றமாக இருக்குமா என்ற கேள்விக்கு, "ஆம் இருக்கலாம்" பதிலளித்தார்.
"சான்பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் போன்ற இடங்களில் இருந்து ஊழியர்கள் நீண்ட தூரம் பயணித்து அலுவலகத்திற்கு வர வேண்டிய கடினமான சூழ்நிலை இருக்கிறது. எனவே இந்த திட்டம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றும் கூறினார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான Alphabet Inc இன் தலைவராக செயல்படும் சுந்தர் பிச்சை, அலுவலகங்களுக்கு ஊழியர்கள் திரும்புவதற்கு முன் கட்டாயமாக தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்பதை அக்டோபர் மாதத்திலேயே அறிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 5:31 pm
எக்ஸ் பயனர்களுக்கு இலவச பிரீமியம் சந்தா: எலான் மஸ்க்
March 27, 2024, 5:47 pm
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
March 27, 2024, 2:52 pm
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் சவுதி அரேபியா
March 27, 2024, 12:43 pm
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
March 27, 2024, 10:31 am
அமெரிக்கப் பாலம் இடிந்த சம்பவம் விசாரணையில் சிங்கப்பூரின் புலனாய்வாளர்கள்
March 27, 2024, 10:22 am
அமெரிக்கா மேம்பாலத்தை மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்
March 27, 2024, 10:19 am
பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் உடைந்த விபத்து: அறுவர் காணவில்லை
March 26, 2024, 11:52 am