நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சினோவாக் செலுத்திய மூத்த குடிமக்களுக்கு நாளை முதல் Pfizer Covid-19 பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்: கைரி ஜமாலுதீன்

கோலாலம்பூர்:

ஃபைசர் தடுப்பூசிகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer Covid-19 பூஸ்டர்  தடுப்பூசி மருந்தாகப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. சினோவாக் இரு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார்.

இந்த திட்டம் நாளை தொடங்கும் என்றும், வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் வகையில் தடுப்பூசிக்கு "மிக்ஸ் அண்ட் மேட்ச்" எனப்படும் அணுகுமுறைக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

பூஸ்டர் டோஸுக்கு தகுதியானவர்களுக்கு மைசேஜ்தேரா மூலமும் குறுஞ்செய்தி (SMS) மூலமும் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

பூஸ்டர் டோஸ் முற்றிலும் அவரவர் விருப்பத்திற்க்கு ஏற்ப செலுத்திக் கொள்ளலாம் என்றும் எத்தகைய வற்புறுத்தலும் இருக்காது என்றும்  அமைச்சர் கைரி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset