செய்திகள் இந்தியா
மந்த கதியில் லக்கீம்பூர் விசாரணை: உச்சநீதிமன்றம் கண்டனம்
புது டெல்லி:
லக்கீம்பூர் கெரி வன்முறை சம்பவத்தில், உத்தரப் பிரதேச காவல் துறை மந்த கதியில் விசாரணை நடத்துவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எஞ்சியுள்ள சாட்சிகளிடம் விரைவில் வாக்குமூலம் பெற்று முடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
லக்கீம்பூர் கெரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடைபெற்றபோது, அந்த வழியாக பாஜகவினர் வந்த கார்களில் ஒன்று அவர்கள் மீது மோதியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர், பத்திரிகையாளர் ஒருவர், பாஜக தொண்டர்கள் இருவர், கார் ஓட்டுநர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மாநில அரசு சார்பில் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய 44 சாட்சிகளில் 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறவில்லை என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கில் காவல் துறையின் விசாரணை மந்த கதியில் நடைபெறுவது கண்டனத்துக்குரியது. எஞ்சியுள்ள சாட்சிகளிடம் உடனடியாக வாக்குமூலம் பதிவு செய்து முடிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, அனைத்து சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm
அரவிந்த் கெஜ்ரிவால் கைது ராகுல் காந்தி, ஸ்டாலின் கண்டனம்
March 22, 2024, 12:28 pm