செய்திகள் இந்தியா
சீனாவுக்கு எதிராக எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா
தவாங்:
அருணாசல பிரதேச எல்லையில் சீனாவுக்கு எதிராக தரம் உயர்த்தப்பட்ட எல்70 போர் விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் இந்தியா குவித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் கிழக்கு லடாக்கில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர்.
13-ஆவது கட்டப் பேச்சுவார்த்தை அண்மையில் தோல்வியில் முடிவடைந்தது.
இந்தச் சூழலில் அருணாசல பிரதேச மாநிலத்தின் யாங்கி என்ற பகுதிக்கு அருகே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய நிலப் பகுதிக்குள் 100 சீன ராணுவ வீரர்கள் அண்மையில் நுழைய முயன்றனர்.
அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஏற்கெனவே எம்777 பீரங்கிகள், ஸ்வீடனின் போஃபர்ஸ் பீரங்கிகளை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், இப்போது கூடுதலாக தரம் உயர்த்தப்பட்ட எல்70 போர் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm
அரவிந்த் கெஜ்ரிவால் கைது ராகுல் காந்தி, ஸ்டாலின் கண்டனம்
March 22, 2024, 12:28 pm