நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் 80% ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன

ஜோகூர் பாரு 

மலேசியாவின் சில பகுதிகளில் ஹோட்டல்களுக்குப் பதிவோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக மலேசிய இளையர், சுற்றுலா விளையாட்டு அமைப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஜோகூர் பாருவிலும் மூவாரிலும் தங்குவிடுதி அறைகள் 80 விழுக்காடு வரை முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜொகூரின் Legoland கேளிக்கைப் பூங்கா, சன்வே நீர் பூங்கா  போன்ற உல்லாசத்தலங்கள் மக்களை ஈர்ப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

Cops: 29 issued compounds for failing to wear face masks in Johor |  Malaysia | Malay Mail

இம் மாதம் 11ஆம் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் உள்நாட்டு அளவில் சுற்றுப்பயண நடவடிக்கைகளில் ஈடுபட மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மலேசியாவில் பெரியவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட பின், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

+ - reset