செய்திகள் மலேசியா
இஸ்ரேலுடனான உறவை சுமூகமாக்கும் எண்ணம் இல்லை: சைஃபுதின் அப்துல்லாஹ் திட்டவட்டம்
கோலாலம்பூர்:
இஸ்ரேலுடனான உறவை சுமூகமாக்கிக் கொள்ளும் எண்ணம் மலேசியாவுக்கு இல்லை என வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதின் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன நிலப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தை மலேசியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றார் அவர்.
பல்வேறு வட்டார மற்றும் அனைத்துலக மன்றங்களிலும் பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்துக்கான அபிலாஷையையும் சுதந்திர பாலஸ்தீனம் என்ற நிலைப்பாட்டையும் மலேசியா ஆதரிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
"பாலஸ்தீனிய இளம் தலைமுறையினர் மற்றும் செயல்பாட்டாளர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் மலேசியாவின் ஆதரவு நீடிக்கும். பாலஸ்தீனிய மக்களுக்கு அரசியல் மற்றும் தார்மீக அடிப்படையிலான ஆதரவை மலேசியா தொடர்ந்து அளிக்கும்.
"மேலும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும் அனைத்துலக அமைப்புகள் மூலம் செய்யும்," என்று அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாஹ் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 6:42 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மித்ரா மானியம் மறு பரிசீலனை செய்யப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:54 pm
பாலர் பள்ளி, உயர்கல்வி மாணவர்கள், சிறுநீரக நோயாளிகளுக்கு மித்ரா நிதி வழங்கப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:42 pm
சாலையோரத்தில் சுயநினைவின்றி கிடந்த தாதியர்; நெகிரி செம்பிலானில் பரபரப்பு
April 20, 2024, 2:04 pm
ஆதரவு அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை: பிரதமர்
April 20, 2024, 12:34 pm
விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 20, 2024, 12:32 pm
ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை டத்தோஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார்
April 20, 2024, 12:08 pm
கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெற ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது: ஜாஹித்
April 20, 2024, 11:20 am
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மசீச பரப்புரை மேற்கொள்ளாது
April 20, 2024, 11:16 am