செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு
சிங்கப்பூர்:
கொரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. அங்கு தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மொத்த படுக்கைகளில் மூன்றில் இரண்டு பங்கு நிறைந்துவிட்டது என்றும் தனிமைப்படுத்தப் படுபவர்களுக்கான 1,650 படுக்கைகளில் சுமார் 90 விழுக்காடு நிறைந்துவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு இயன்ற வகையில் ஆதரவு அளிக்கும் என்றும் மனித ஆற்றலை அதிகரிக்க கைகொடுக்கும் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் Ong Ye Kung தெரிவித்துள்ளார். எனினும், இதற்கு சில காலம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து இரு வாரங்களுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு
April 17, 2024, 1:55 pm
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா
April 17, 2024, 12:36 pm
லண்டன் ஹீத்ரோ விமான நிலைய எல்லை கட்டுப்பாட்டு பரிசோதனை பிரிவு அதிகாரிகள் போராட்டம்
April 17, 2024, 10:19 am
ஓமனில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம்
April 17, 2024, 10:12 am