நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக விஜய் சங்கர் தேர்வு: தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக விலகல்

சென்னை:

காயம் காரணமாக தினேஷ் கார்த்திக் விலகியதால், சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணி கேப்டனாக விஜய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி- 20 தொடரில், தமிழ்நாட்டின் சார்பாக விளையாடும் அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாநில தேர்வுக் குழு ,கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது. 

இதில் தமிழ்நாடு அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். துணைக்கேப்டனாக  விஜய் சங்கர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

Syed Mushtaq Ali trophy 2021: Motera Stadium to host knockout matches of  Syed Mushtaq Ali Trophy

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது தினேஷ் கார்த்திக் முழங்காலில் காயமடைந்தார். அவர் இன்னும் குணமடையாததால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனால், விஜய் சங்கர் கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆதித்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset