செய்திகள் மலேசியா
தடுப்பூசி போடுவது கட்டாயமா?: முடிவெடுக்கவில்லை என்கிறார் பிரதமர்
புத்ராஜெயா:
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படுவது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் தடுப்பூசிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தடுப்பூசிக்கு எதிராகச் செயல்படும் சில குழுவினர் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், இத்தகையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நாட்டின் சட்டத்தில் இடமுள்ள எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.
"தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சுகாதார அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.
தடுப்பூசிக்கு எதிரானவர்கள் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தடுப்பூசி குறித்து அவர் பரப்புவது பொய்யான தகவல் என்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப்.
முன்னதாக, மக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான குழுவினர் பொய் தகவல்களைப் பரப்புவதாகவும், இது தொடர்பாக தமது அமைச்சு பல்வேறு புகார்களை காவல்துறையில் அளித்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:16 pm
இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: 10 பேர் சொஸ்மாவில் கைது
April 19, 2024, 12:29 pm
மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோ வீரா சைடி ஜொஹாரி காலமானார்
April 19, 2024, 11:14 am
மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்
April 19, 2024, 11:11 am
ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா
April 19, 2024, 11:05 am
தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு
April 19, 2024, 11:04 am
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன
April 19, 2024, 11:03 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை
April 19, 2024, 11:01 am
முடக்கப்பட்ட சம்பளத்தை போராடி பெற்றார் ரொனால்டோ
April 19, 2024, 11:00 am