நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தேசிய விளையாட்டு கவுன்சில் முன்னாள் தலைவர் ஜோல்கிள்ஸ் எம்பாங் காலமானார்; மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை

கோலாலம்பூர்:

தேசிய விளையாட்டு மன்றத்தின் (National Sports Council (NSC) முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஜோல்கிபிள்ஸ் எம்பாங் இன்று காலை அவரது வீட்டில் இறந்து கிடந்தார். 

அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு வரவில்லை.  அன்று முதல் ஜோல்கிள்ஸை தொடர்பு கொள்ள முடியவில்லை என என்எஸ்சி ஊழியர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். 

அதன்பிறகு காவல்துறையும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகளும் இன்று காலை சோல்கிப்பிள்ஸின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு அவர் சமையலறையில் இறந்து கிடக்கக் கண்டனர்.

காவல்துறையினரால் வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கைகளின்படி, மரணத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், மாரடைப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பெயர் குறிப்பிடப்படாத ஒரு போலீஸ் அதிகாரியை மேற்கோள் காட்டி தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா தெரிவித்துள்ளது.

செய்திக்கு பதிலளிக்கும் விதமாக, மலேசிய விளையாட்டு வீரர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் இன்று அதிகாலை அவரது மரணத்தை உறுதி செய்தது.

மரணத்திற்கான காரணத்தை காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset