செய்திகள் வணிகம்
ஏர் இந்தியாவை வாங்க டாடா, ஸ்பைஸ் ஜெட் விருப்பம்
புது தில்லி:
ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கான விண்ணப்பங்களை அந்நிறுவனங்கள் இந்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.
இதுகுறித்து டிஐபிஏஎம் துறை செயலர் துகின் கந்தா பாண்டே சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:
பரிவர்த்தனை ஆலோசகர்களால் ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நிதி ஏல விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது இது இறுதி கட்டத்தை நோக்கி நகரவுள்ளது என துகின் கந்தா அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஏர் இந்தியாவுக்கான விற்பனை போட்டியில் எத்தனை நிறுவனங்கள், என்னென்ன நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
டாடா குழுமம், ஏர் இந்தியாவான டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுவியது. பின்னர் இந்த நிறுவனம் மத்திய அரசால் கடந்த 1953-ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.
இந்த ஏலத்தில் வெற்றி பெறும்பட்சத்தில், 67 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடாவின் வசமாகும்.
தொடர்புடைய செய்திகள்
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm