நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அல்-நாசர் அணிக்காக முதல் கோலை அடித்தார் கிறிஸ்டியானோ ரொனல்டோ

ரியாத்:

அல்-நாசர் அணிக்காக முதல் கோலை அதன் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.

பிரின்ஸ் அப்துல்லாஹ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல்-நாசர் அணியினர் அல் பதே அணியை சந்தித்து விளையாடினர்.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டனர்.

இவ்வாட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் அல்-நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலை அடித்தார்.

மிகப் பெரிச சம்பளத்தில் அல்-நாசர் அணியில் இணைந்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ அவ்வணிக்காக அடித்த முதல் கோல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset