செய்திகள் இந்தியா
பொது சிவில் சட்டம் அமல் எப்போது?; முடிவெடுக்கவில்லை: இந்திய சட்ட அமைச்சர்
புது டெல்லி:
இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று இந்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அவர் தாக்கல் செய்துள்ள பதிலில், பொது சிவில் சட்டம் குறித்த பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து பரிந்துரைக்குமாறு 21-ஆவது சட்ட ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த ஆணையத்தின் பதவிக்காலம் 2018, ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டதால் இந்த விவகாரம் 22-ஆவது சட்ட ஆணையத்திடம் உள்ளது.
ஆகையால், பொது சிவில் சட்ட அமலாக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
22-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 2020, பிப்ரவரி 21-ஆம் தேதி அமைக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் மத்திய அரசு நியமித்தது.
பிப்ரவரி மாத இறுதியில் 22-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என்று 2014, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு போலி கடப்பிதழில் வந்த பெண் உட்பட 2 பேர் கைது
April 18, 2024, 10:22 pm
ஹெலிகாப்டர், தனி விமான விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
April 18, 2024, 9:48 pm
ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் காந்தி
April 18, 2024, 8:36 am
சத்தீஸ்கரில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
April 16, 2024, 10:54 pm
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் கைது
April 16, 2024, 10:49 pm
அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல்
April 15, 2024, 5:16 pm