செய்திகள் இந்தியா
அதானி விவகாரத்தால் இந்திய நாடாளுமன்றத்தில் அமளி
புது டெல்லி:
அதானி குழுமத்தின் மீதான மோசடி புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
அவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி புகார் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் மோசடி தொடர்பாக நாடாளுமன்றற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் காங்கிரஸ், திமுக, திரிணமூல், இடதுசாரிகள், முஸ்லிம்லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராகவும், அதானி குழுமத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சிகளின் அவசர கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்த இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:50 pm
குறைந்தது 50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தாருங்கள்: காங்கிரஸ் தலைவரிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm