நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இரட்டை இலை யாருக்கு? அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு

புதுடெல்லி: 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கவில்லை என்றும், இரட்டை இலை சின்னத்தை வழங்குவது குறித்து தேர்தல் அதிகாரி தான் முடிவெடுப்பார் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவின் போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை நாங்கள் நேரடியாக ஒதுக்கீடு செய்தோ அல்லது அதற்கு சம்மதம் தெரிவித்தோ உத்தரவு பிறப்பிக்க முடியாது. 

அதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதுசார்ந்த தேர்தல் அதிகாரி தான் இறுதி முடிவை மேற்கொண்டு அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார். மேலும் அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றிய தீர்மானம் அனைத்தும் கேள்விக்குறியதாகவும், விவாதத்திற்கு உள்ளதாக இருக்கிறது.

* கடந்த ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

* இரட்டை இலை சின்னம் தொடர்பாக இதுவரை யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

* ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் இரட்டை சின்னம் குறித்த இறுதி முடிவை அறிவிப்பார்.

* எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய ஒ.பி.எஸ் கோரிக்கை

உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக  பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி  பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்ற ஏற்காமல் நிராகரித்து  அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

குறிப்பாக பொதுக்குழு தொடர்பான வழக்கில்  அனைத்து சரத்து மற்றும் விவரங்களும் அடங்கியுள்ள நிலையில், அதற்கு மாறாக  தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது  கிடையாது. 

சட்டவிரோதமான நடவடிக்கைகளில்  ஈடுபட்டு கட்சியை தன்வசப்படுத்த எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இதுபோன்று  செய்வது என்பது நீதிமன்ற சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். இந்த  விவகாரத்தில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் அனைத்து முயற்சிகளையும்  எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset