நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு சாரா இயக்கம் என்ற  போர்வையில் குண்டர் கும்பல்

கோலாலம்பூர்:

அரசு சாரா இயக்கம் என்ற போர்வையில் குண்டர் கும்பல் நடவடிக்கை நாட்டில் அதிகரித்துள்ளதாக மலாய் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் சுந்திரமாக செயல்பட குண்டன் கும்பல்கள் அரசு சாரா இயக்கங்களை பதிவு செய்துக் கொள்கின்றன.

இந்த இயக்கத்தின் வாயிலாக அக்கும்பல் பல சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

பார்ப்பதற்கு அச்சங்கங்களில் நற்காரியங்கள் போன்று பிரதிப்பலித்தாலும் சட்டவிரோத பணத்தை மாற்றும் நடவடிக்கையாகவும் இது அமைந்து உள்ளது.

உண்மையில் பல குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தான் அதிகம் இந்த இயக்கங்களில் உள்ளனர்.

நாட்டில் இதுவரை குண்டர் கும்பல்கள் அடங்கிய 72 அரசு சாரா இயக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த இயக்கங்களில் 9,042 உறுப்பினர்கள் உள்ளனர்.  மலாய், சீனர், இந்தியர், சபா, சரவா மக்களும் இந்த இயக்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset