நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சியின் வங்கி கணக்கை முடக்க நான் உத்தரவிடவில்லை: பிரதமர்

புத்ராஜெயா:

பெர்சத்து கட்சியின் வங்கி கணக்கை முடக்க பிரதமர் என்ற முறையில் நான் எந்த உத்தரவையும்  பிறப்பிக்கவில்லை என்று டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின் டத்தோஸ்ரீ அன்வார் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

பெர்சத்து கட்சியின் வங்கி கணக்கு முடக்கத்திற்கு ஒற்றுமை அரசாங்கம்தான் காரணம் என்று குற்றம் சட்டப்பட்டு வருகிறது.

இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும். புகார்களின் அடிப்படையில் எந்தவொரு நிறுவனமும் நடவடிக்கைகளை எடுக்கும்.

அதே வேளையில் போலீஸ், எம்ஏஏசி, நீதித்துறை என அனைத்தும் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக எந்தவொரு கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றின் கணக்குகளை சரிபார்ப்பதற்கு ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.

அதன் அடிப்படையில் தான் பெர்சத்து கட்சியின் விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதில் பிரதமரான நான் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset