செய்திகள் மலேசியா
கண்மூடித்தனமான காய்கறிகளின் விலை உயர்வை நிறுத்துங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேதனை
பினாங்கு:
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சும் மத்திய விவசாய சந்தைப்படுத்தல் ஆணையமும் (FAMA) பாமா 160% வரை அதிகரித்துள்ள காய்கறிகளின் விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில், காய்கறிகளின் விலைகள் எவ்வித காரணமும் இல்லாமல் தொடர்ச்சியாக உயர்வு கண்டுள்ளது பயனீட்டாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இந்த உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என்றார் அவர்.
விலைகள் ஒப்பீடு:
வெண்டைக் காய் (பெண்டி)
மவெ 6.00 லிருந்து
மவெ 16.00 உயர்வு.
166% விலை உயர்வு.
பயிற்றங்காய்
மவெ 6.00 லிருந்து
மவெ.12.00க்கு. 100% உயர்வு.
தக்காளி
மவெ 4.50 லிருந்து
மவெ 10.00 க்கு விற்கப்படுகின்றது. 120% உயர்வு.
பீன்ஸ்
மவெ 6.00 லிருந்து
மவெ 12.00 வரை.
100% விலை உயர்வு.
கத்திரிக்காய்
மவெ 7.00 முதல் மவெ 12.00 வரை
71% உயர்வு.
எதிர் வரும் வாரங்களில் மற்ற காய்கறிகளின் விலை உயரக்கூடும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் எச்சரித்ததாக பல சில்லறை விற்பனையாளர்கள் தங்களிடம் புகார் தெரிவித்தனர் என முஹைதீன் கூறினார்.
இதன்மீது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் அமலாக்கப் பிரிவு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சராசரி வருமானம் ஈட்டுபவர்கள் பொருட்களின் விலை அதிகரிப்பால் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஆதாயச் சட்டம் 2010:
இடைத்தரகர்களின் லாபவெறியை ஒழிக்க, நாட்டில் காய்கறிகளின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்த பாமாவுக்கு பி.ப.சங்கம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளது. ஆனால் எங்கள் கோரிக்கை செவிடன் காதில் விழுந்த கதைதான்
என்றார் முஹைதீன் அப்துல் காதர்.
சம்பந்தப்பட்ட அரசாங்க இலாக்காகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மெத்தன போக்கை கடைபிடிக்கக் கூடாது என்றார் அவர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:16 pm
இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: 10 பேர் சொஸ்மாவில் கைது
April 19, 2024, 12:29 pm
மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோ வீரா சைடி ஜொஹாரி காலமானார்
April 19, 2024, 11:14 am
மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்
April 19, 2024, 11:11 am
ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா
April 19, 2024, 11:05 am
தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு
April 19, 2024, 11:04 am
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன
April 19, 2024, 11:03 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை
April 19, 2024, 11:01 am
முடக்கப்பட்ட சம்பளத்தை போராடி பெற்றார் ரொனால்டோ
April 19, 2024, 11:00 am