நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அதானியைப் பின்னுக்கு தள்ளினார் அம்பானி

புது டெல்லி:

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கௌதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்தததால் ஆசியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்தார்.

பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானியின் பங்குகள் சரிந்து 15ஆவது இடத்தில் உள்ளார்.

ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலர்கள் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியில் முதலிடம் வகித்து வந்த கௌதம் அதானி, அந்த இடத்தை இழந்ததையடுத்து, 2ஆவது இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset