செய்திகள் இந்தியா
துபாய் மாமனாரிடம் மருமகன் ரூ.100 கோடி மோசடி: கேரளத்தில் புகார்
கொச்சி:
துபாயில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லாஹிர் ஹசன், தன்னுடைய மருமகன் முகம்மது ஹாஃபிஸ் ரூ.100 கோடி மோசடி செய்துவிட்டதாக கேரள காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
தனது மகள் திருமணத்தின்போது தனது மகளுக்கும் மருமகனுக்கும் சேர்த்து ஆயிரம் பவுன் நகையை வழங்கியதாகவும், ஆனால், பேராசையில் ரூ.107 கோடி மதிப்பிலான சொத்துகளை தன்னுடைய அனுமதியின்றி மருமகன் மோசடியாக அபகரித்துவிட்டதாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
குற்றத்தில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.100 கோடிக்கும் மேல் உள்ளதால் கேரள காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்படுள்ளது.
முன்னதாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹசன் அளித்த பேட்டியில், புகாருக்கு உள்ளானவர்களை கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ ஆலுவா போலீஸார் தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், "இந்த மோசடியில், தொழிலதிபர் ஹசனின் மருமகன் ஹாஃபிஸýம் அவரது நண்பர் அக்ஷய் தாமஸ் வைத்யனும் கூட்டாக செயல்பட்டதை உறுதி செய்துள்ளோம். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு போலி கடப்பிதழில் வந்த பெண் உட்பட 2 பேர் கைது
April 18, 2024, 10:22 pm
ஹெலிகாப்டர், தனி விமான விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
April 18, 2024, 9:48 pm
ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் காந்தி
April 18, 2024, 8:36 am
சத்தீஸ்கரில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
April 16, 2024, 10:54 pm
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் கைது
April 16, 2024, 10:49 pm
அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல்
April 15, 2024, 5:16 pm