நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

துபாய் மாமனாரிடம் மருமகன் ரூ.100 கோடி மோசடி: கேரளத்தில் புகார்

கொச்சி:

துபாயில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லாஹிர் ஹசன், தன்னுடைய மருமகன் முகம்மது ஹாஃபிஸ் ரூ.100 கோடி மோசடி செய்துவிட்டதாக கேரள காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

தனது மகள் திருமணத்தின்போது தனது மகளுக்கும் மருமகனுக்கும் சேர்த்து ஆயிரம் பவுன் நகையை வழங்கியதாகவும், ஆனால், பேராசையில் ரூ.107 கோடி மதிப்பிலான சொத்துகளை தன்னுடைய அனுமதியின்றி மருமகன் மோசடியாக அபகரித்துவிட்டதாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.

குற்றத்தில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.100 கோடிக்கும் மேல் உள்ளதால் கேரள காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்படுள்ளது.

முன்னதாக, தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹசன் அளித்த பேட்டியில், புகாருக்கு உள்ளானவர்களை கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ ஆலுவா போலீஸார் தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், "இந்த மோசடியில், தொழிலதிபர் ஹசனின் மருமகன் ஹாஃபிஸýம் அவரது நண்பர் அக்ஷய் தாமஸ் வைத்யனும் கூட்டாக செயல்பட்டதை உறுதி செய்துள்ளோம். விசாரித்து  நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset