நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 10ஆவது பிரதமராக அன்வார் இன்று பதவியேற்கலாம்: சலாஹுத்தீன் கோடிக்காட்டினார்

கோலாலம்பூர்:

நாட்டின் 10ஆவது பிரதமராக நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பதவியேற்கலாம் என்று அமானா கட்சியின் துணைத் தலைவர் சலாஹூத்தீன் அயூப் கோடிக் காட்டியுள்ளார்.

15ஆவது பொதுத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் நாட்டின் ஒற்றுமை அரசாங்கம் அமைய வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஒற்றுமை அரசாங்கத்தை தேசிய கூட்டணி தலைவர் மொகிதீன் யாசின் நிராகரித்துள்ளார்.

ஆனால், நம்பிக்கை கூட்டணிக்கு அதுவொரு பிரச்சினையாக இருக்காது.
அதே வேளையில் நம்பிக்கை கூட்டணிக்கு பல கட்சிகளின் ஆதரவு உள்ளது.

இதனால் இன்று மாலையில் டத்தோஸ்ரீ அன்வார் நாட்டின் 10ஆவது பிரதமராக பதவியேற்கலாம் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset